• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேற்கு வங்க மாநிலம் பங்காள என பெயர் மாற்றம்!

July 26, 2018 தண்டோரா குழு

மேற்குவங்க மாநிலத்திற்கு ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்யும் வகையில் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்தியாவின் தலைநகரமாக 1911ம் ஆண்டு வரை கொல்கத்தா இருந்தது.பின்னர், புதுடெல்லி தலைநகராக மாறியது.எனினும் கொல்கத்தா என்னும் பெயரிலேயே அம்மாநிலம் அழைக்கப்பட்டது.

கடந்த 2002ம் ஆண்டு புத்ததேப் பட்டாச்சார்யா தலைமையிலான இடது முன்னணி அரசு கொல்கத்தாவை மேற்கு வங்காளம் என மாற்றம் செய்தது.இந்நிலையில் மாநிலத்தின் பெயர் ஆங்கில எழுத்தில் டபிள்யூ(W) என்ற எழுத்தில் தொடங்குவதால், கரவரிசையின் படி அந்த மாநிலம் பட்டியலில் பின் வரிசையில் உள்ளது.எனவே,மேற்கு வங்காளம் பெயரை மாற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு முயற்சி செய்து வருகிறது.

இதையடுத்து,இதனை மாற்றி அகரவரிசையில் முன்னிலை பெறும் வகையில் அந்த மாநிலத்தின் பெயரை மாற்றி 2016ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அந்த வகையில்,ஆங்கிலத்தில் பெங்கால் எனவும் இந்தியில் பங்காள் எனவும் வங்க மொழியில் பாங்ளா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால்,ஒரு மாநிலத்தின் பெயர் 3 மொழிகளில் வெவ்வேறாக இருப்பது சாத்தியமல்ல எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அந்த மாநிலத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதையடுத்து,மீண்டும் பெயர் மாற்றும் முயற்சில் இறங்கிய மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் கூட்டி அனைத்து மொழிகளிலும் பங்காள என ஒரே பெயரில் அழைக்க முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மேற்கு வங்காள சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி இந்தி,ஆங்கிலம்,வங்கம் உள்ளிட்ட 3 மொழிகளிலும் “பாங்ளா” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.பின்னர் இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க