• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருத்தணி அருகே வேகமாகப் பரவு வைரஸ் காய்ச்சல், 4 குழந்தைகள் பலி

August 20, 2016 தண்டோரா குழு

திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மர்மக்காயச்சல் பரவி வந்தது.இந்தக் காய்ச்சலில் அதிகமாகக் குழந்தைகள் தான் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரவிய இடங்களில் சோதனை செய்தனர்.

அந்தச் சோதனையில் பரவி வருவது வைரஸ் காய்ச்சல் எனக் கண்டறியப்பட்டது. ஆனால் அதற்குள் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.மேலும் பலர் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இரண்டு சிறுவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர்.ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.இதனால் இப்பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சிறுவர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.

மேலும் படிக்க