• Download mobile app
27 Feb 2026, FridayEdition - 3670
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரமுத்து மீதான சின்மயி பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியன்

October 13, 2018 தண்டோரா குழு

கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு அளித்த நீதிபதி கம்யூனிஸ்ட் கட்சியில் சிறுவயதில் இருந்ததாகவும்,வழக்கை தொடர்ந்தது இஸ்லாமிய பெண்மணி எனவும்,வழக்கை நடத்தியது கம்யூனிஸ்ட் அரசு என்பதால் வழக்கை சரிவர கையாளவில்லை என்றும்,எனவே தீர்ப்பை மறு ஆய்வு செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்றும்,மசூதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தீர்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் கேரள அரசு,உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல தீர்ப்புகள் அமல்படுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

திருப்பூர் அருகே பொங்கலூரில் வரும் டிசம்பர் 23,24,25 ஆகிய மூன்று நாட்களில் 1 லட்சம் குடும்பத்தை கொண்ட 5 லட்சம் பேரை வைத்து மிகப்பெரிய யாகபூஜையும்,ஆயிரத்து எட்டு நாட்டு மாடுகளை கொண்ட கஜ-பூஜை நடைபெறவுள்ளதாகவும்,அதற்கான ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும்,ஐ.ஜி.பொன்மாணிக்மவேல் சிறப்பாக செயல்படுவதால் பதவியை நீட்டித்து சிலைகள் கடத்தல் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.சாதி பிரச்சனையை தூண்டும் விதமாக பேசும் கருணாஸ்,எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்”. இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க