August 23, 2018
தண்டோரா குழு
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும்,பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால்,கடந்த 16-ம் தேதி காலமானார்.அவரது உடல்,17-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.இதற்காக,சென்னை கொண்டு வரப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி,தியாகராயநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மரியாதை செலுத்தினர்.