• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டுவிட்டரில் ட்ரெண்டான ரஜினி சொன்ன ஒரு வார்த்தை!

January 5, 2018 தண்டோரா குழு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன ஒரு வார்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி ரசிகர்கள் சந்திப்பின் போது தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும்,அதுவே காலத்தின் கட்டாயம் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில்,ரஜினி அரசியல் அறிவிப்பை தெரிவிக்கும் முன்பு தான் அரசியலைப் பார்த்துபயப்படவில்லை.ஆனால், ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு “எனக்கு ஒரு நிமிஷம் தலை தலைசுத்திருச்சு” என்று கூறினார். அதனையடுத்து, ரஜினிகாந்த் பயன்படுத்திய “எனக்கு ஒரு நிமிஷம் தலை தலைசுத்திருச்சு” என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வார்த்தைகளை பயன்படுத்தி, அதைவைத்து உருவாக்கப்பட்ட மீம்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனால், ட்விட்டரில் #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகில் மீம்களை சமூகவலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க