• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போக்குவரத்து ஊழியர்கள் பிச்சையெடுத்து போராட்டம்

December 2, 2016 தண்டோரா குழு

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிர்வாகம் தவணை முறையில் ஊதியம் வழங்குவதாகக் கூறி, கண்டித்து போக்குவரத்துத் தொழிலாள ர்கள் பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்ற அறிவிப்பை அடுத்து, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை வழங்காமல் மூவாயிரம் ருபாய் ரொக்கத்தை கையிலும் ஒரு பகுதி சம்பளத்தை வங்கியிலும் செலுத்தியுள்ளனர்.

மீதி ஊதியம் சில தினங்கள் கழித்தே தரப்படும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசைக் கண்டித்தும் உரிய முன்னேற்பாடுகள் செய்யாத மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் கோவை கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பணிமனைகளிலும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக கோவை சுங்கம் பணிமனையின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன துணைத் தலைவர் ப. காளியப்பன் தலைமை தாங்கினார்.

“இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மாதம் முழுவதும் உழைத்த தொழிலாளர்கள் தவனை முறையில் ஊதியம் தருவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், வீட்டு வாடகை, மருத்துவம், கல்விச் செலவு உள்ளிட்டவற்றைச் செய்ய முடியாமல் தவிக்கிறோம்.

பிச்சையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறி பிச்சையெடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கோவை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பணிமனைகளின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க