January 10, 2020
மாவட்ட துணை ஆட்சியர், மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளருக்கான TNPSC குரூப் 1 தேர்வில் கோவை சங்கர் ஐஏஎஸ் மாணவர்கள் இருவர் வெற்றி அடைந்துள்ளனர்.
தென்னிந்தியாவின் மிகச்சிறந்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமான சங்கர் ஐஏஎஸ் அகாடமி யுபிஎஸ்சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசின் பணியாளர் தேர்வில் தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறது கோவையில் செயல்பட்டு வருகின்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமி. மேலும் தமிழகத்தில் 181 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
இதில் கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற எஸ்.சங்கீதா, 63வது ரேங்க் பெற்று துணைக் காவல் கண்காணிப்பாளராகவும் எஸ்.ஸ்வேதா என்ற பெண் 93வது ரேங்க் பிடித்து கூட்டுறவு சொசைட்டி துணை ரிஜிஸ்தரராக வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் வெற்றியைப் பாரட்டும் விதமாக கோவை காந்திபுரம், ராம் நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கிளைத் தலைவர் அருண், நிர்வாக இயக்குனர் யாஷ்மி அருண், மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்கள், மற்றும் உடண் பயிலும் மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கெளரவப்படுத்தினர்.