• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இனி பயன்படுத்த முடியாது

December 15, 2016 தண்டோரா குழு

அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்துகள் வாங்க பயன்பாட்டில் இருந்த பழைய 5௦௦, 1000 ருபாய் நோட்டுகள் வியாழக்கிழமை(டிசம்பர் 15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 8ம் தேதி 5௦௦ மற்றும் 1,௦௦௦ நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்கு பிறகு மக்கள் பல நாட்களாக வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பல மக்கள் இறந்தும் உள்ளனர்.

இருப்பிலும், சமையல் எரிவாயு, தண்ணீர், மின்சாரம், மருந்து பொருள்கள், பெட்ரோல் டீசல் ஆகியவற்றை பெறுவதற்கு பழைய 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இந்த பழைய 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சக்திகாந்த தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாவது:

குறிப்பிட்ட சேவைகளுக்காக, பழைய 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க