• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி தலைமையில் குழு – உயர் நீதிமன்றம் உத்தரவு

November 12, 2016 தண்டோரா குழு

ஆம்னி பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டன. இந்த அறிக்கையைப் படித்த உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டனர்.

இந்த வழக்கில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்காதது ஏன் என்று கேட்டு, அதற்குத் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தனி நபருக்கான கட்டணத்தை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க