• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி தலைமையில் குழு – உயர் நீதிமன்றம் உத்தரவு

November 12, 2016 தண்டோரா குழு

ஆம்னி பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டன. இந்த அறிக்கையைப் படித்த உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டனர்.

இந்த வழக்கில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்காதது ஏன் என்று கேட்டு, அதற்குத் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தனி நபருக்கான கட்டணத்தை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க