• Download mobile app
06 Dec 2025, SaturdayEdition - 3587
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கானா மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் சுட்டுக்கொலை

August 8, 2016 தண்டோரா குழு

பிரதமர் நேற்று தெலுங்கானாவிற்கு வந்து சென்ற நிலையில் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இருவர் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மேஹபூப்நகரில் உள்ள ஷாட்நகர் மில்லேனியம் டவரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியைச் சுற்றிவளைத்த தெலுங்கானா காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் சரணடையக் கூறியுள்ளனர்.

ஆனால் தாக்குதலைத் துவங்கியதால் காவல்துறையினரும் எதிர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் தீவிரவாதி என நம்பப்படும் நதீம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் இருப்பவர்களைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் பிரதமரின் நிகழ்ச்சியைக் குறிவைத்து வந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரதமர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத மேடையில் இருந்து பேசவேண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க