• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது – கமல்

November 22, 2018 தண்டோரா குழு

ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார்.புயல் பாதிக்கப்பட்ட இடங்களில்,முதல் இடமாக தஞ்சைக்கு சென்ற அவர்,பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.புயலால் ஏற்பட்ட சேதங்களையும் தனது கட்சியினருடன் சென்று பார்வையிட்டார்.

இதற்கிடையில்,நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“தரையில் கால் பாவிட,மக்களோடு மக்களாக நின்று பார்த்தால்,கேட்டால்… புரியும் சோகம்,தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது.கேட்கிறதா அரசுக்கு? அம்மையப்பன்,அம்மாபேட்டை,கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம்,எங்களுக்கு உணவு இருக்கிறது,மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்பட வைத்தது.இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க