• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

September 3, 2018 தண்டோரா குழு

தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த பிரச்சனையில் தமிழக அரசு நேரடியாக தலையீடக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று(செப் 3)மனு அளித்தனர்.

தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான 7 பஞ்சாலைகளில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த மே 31ம் தேதி பழைய சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் போடாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனைக் கண்டித்து கடந்த 20ம் தேதி முதல் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.மண்டல தொழிலாளர் ஆணையரின் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியும்,நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.நிர்வாகத்தின் அலட்சியத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும்,தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் சம்பள இழப்பும் ஏற்படுகிறது.

மேலும்,தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்தில் பணிபுரியும்,தொழிலாளர்களின் நலன் கருதி,தமிழக அரசு நேரடியாக தலையீட்டு புதிய சம்பள ஓப்பந்தத்தை ஏற்படுத்தக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் படிக்க