• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தர்ணா போராட்டம்

August 20, 2018 தண்டோரா குழு

தமிழக அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தமிழக அரசிடம் மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பாக மாநில அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

இதுவரை மாநில அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று நோயாளிகள் பாதிக்காத வண்ணம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.மத்திய அரசு மருத்துவர்கள் குறுகிய காலத்தில் பணி உயர்வு பெறுவதாகவும்,7 ஆண்டுகள் கழித்த பின்பு தான் தமிழக அரசு மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதாக குற்றம்சாட்டினர்.

மேலும்,வருகின்ற 24ம் தேதி அனைத்து மருத்துவர்களும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து அரசுக்கு ஒத்துழைக்காமல் மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரவிசங்கர் தெரிவித்தார்.

மேலும் படிக்க