• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி !

October 8, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே இன்று காலை பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.அப்போது,தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் நிதி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.இச்சந்திப்பின் போது அமைச்சர் டி.ஜெயக்குமார்,தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,

“தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள்,நிதி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும்.சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரதன ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்தேன்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வலியுறுத்தினேன்.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்ட வலியுறுத்தினேன்.கூட்டுறவு சங்க தேர்தலில் 93 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது குற்றம் மட்டுமே சாட்டப்பட்டு உள்ளது,அது நிரூபிக்கப்படவில்லை. காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால்,இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியது தான். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.டிடிவி தினகரன் ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.முழுமையாக விளக்கம் அளித்துவிட்டார்.இதில் மேற்கொண்டு பேச எதுவும் இல்லை.மேலும் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க