• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவு

August 9, 2018 தண்டோரா குழு

கேரளா,கர்நாடகாவில் கனமழை பெய்வதால் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நடாகா மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.இதனால் அணைகளில் உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த நீர் இரண்டு நாட்களில் மேட்டூருக்கு வரும் என தெரிகிறது.

இதையடுத்து கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,ஈரோடு,திருச்சி,தஞ்சை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதைபோல், முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும்,2 நாட்களுக்குள் மேட்டூருக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க