• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா ஸ்வராஜ்

November 16, 2016 தண்டோரா குழு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சேர்க்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள்‌ அவரைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ள அவர், “சிறுநீரக கோளாறு காரணமாக நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன். தற்போது டயாலிசிஸ் நடைபெற்று வருகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இறைவன் அருள்புரிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது உடல்நிலை குறித்து நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இதனைப் பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க