• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுபாஷ் சந்திர போஸின் 121வது பிறந்த நாள் தினம்: இந்திய தலைவர்கள் மரியாதை

January 23, 2018 தண்டோரா குழு

மறைந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் 121வது பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோது, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 121-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கடந்த 1897ம் ஆண்டு, ஜனவரி 23ம் தேதி, ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் பிறந்தார்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர்,1922ம் ஆண்டு, ஸ்வராஜ் கட்சியை தொடங்கினார்.அவருடைய தேசபற்று இந்திய நாட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெய் ஹிந்த்’ என்ற அவருடைய முழக்கம் இன்றும் கூட ஒலிக்கிறது.

சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி,தனது ட்விட்டரில், ஒரு நிமிட காணொளியுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் “சுபாஷ் சந்திர போஸின் வீரம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைபடுத்துகிறது. இந்த பெரும் தலைவருக்கு தலை வணங்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்,சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,பா.ஜ.க கட்சி தலைவர் அமித் ஷா, ஆகிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க