• Download mobile app
11 Jul 2025, FridayEdition - 3439
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு

September 26, 2016 தண்டோரா குழு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் ஷூவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்கும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தீவிர பணியாற்றி வருகிறது.இதற்காக கடந்த சில நாட்களாக கிஷன் யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் விவசாயிகள் மற்றும் ஏழைகளை சந்தித்து வருகிறார்.

அவர் இதுவரை 2,200 கி.மீ., தூரம் பயணித்துள்ளார். இன்று லக்னோவில் இருந்து 85 கி.மீ., தூரத்தில் உள்ள சீதாப்பூர் என்ற நகரில் திறந்தவெளி வேனில் யாத்திரை மேற்கொண்டார். அவர் பொதுமக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி ஒரு வாலிபர் தனது ஷூவை வீசி எறிந்தார்.

இது குறித்து சீதாப்பூரில் ராகுல் காந்தி மீது ஷூ வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க