• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகுமார் வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றம்

September 28, 2016 தண்டோரா குழு

கோவையில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளது.

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த வார அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் பெரும் பதற்ற சூழல் நிலவியது. மேலும், அவரது இறுதி ஊர்வலத்தின் போது கடைகள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டன.

இதையடுத்து கொலையாளியை பிடிக்க டிஐஜி நாகராஜன் தலைமையில் 3 மாவட்ட சுப்பிரண்டுகள் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், சசிக்குமார் கொலை வழக்கை திடீரென சிபிசிஐடிக்கு மாற்றி
டிஜிபி டி. கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க