• Download mobile app
14 May 2026, ThursdayEdition - 3746
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகுமார் வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றம்

September 28, 2016 தண்டோரா குழு

கோவையில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளது.

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த வார அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் பெரும் பதற்ற சூழல் நிலவியது. மேலும், அவரது இறுதி ஊர்வலத்தின் போது கடைகள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டன.

இதையடுத்து கொலையாளியை பிடிக்க டிஐஜி நாகராஜன் தலைமையில் 3 மாவட்ட சுப்பிரண்டுகள் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், சசிக்குமார் கொலை வழக்கை திடீரென சிபிசிஐடிக்கு மாற்றி
டிஜிபி டி. கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க