• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பண மோசடியில் ஈடுபடுவோர் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது – சக்தி காந்த்தாஸ்

December 2, 2016 தண்டோரா குழு

பண மோசடியில் ஈடுபடுபவர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த்தாஸ் எச்சரித்துள்ளார்.

கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு 85 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மக்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள், அப்பாவி மக்களைப் பயன்படுத்தி அதனை வெள்ளையாக மாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.

மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்குக்காகத் தொடங்கிய ஜன்தன் வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தைச் செலுத்தி அதனை வெள்ளையாக்கும் முயற்சிகளும் நடந்தன. கிராம மக்கள் இதுபோன்ற மோசடியாட்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஜன்தன் வங்கிக் கணக்கிளிலிருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் கறுப்புரி பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த் தாஸ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது;

பண மோசடியில் ஈடுபடுபவர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இது தொடர்பாக சிலர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பலன்கள் தற்போது தெரிய வருகின்றன. இனி வரும் காலங்களில் இது இன்னும் தெளிவாகிவிடும்” என்றார்.

மேலும் படிக்க