• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

January 23, 2018 தண்டோரா குழு

நடிகர் விஷால் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், கையெழுத்து குளறுபடி காரணமாக விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலின் போது விஷாலை சிலர் முன்மொழிந்ததாக கூறியிருந்தனர். ஆனால், தன்னை முன்மொழிந்தவர்களை சிலர் மிரட்டுவதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நடிகர் விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி மிரட்டப்பட்டனரா⁉ என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரட்டியது தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க