• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பலூசிஸ்தான் பெண் வாழ்த்து

August 20, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறலுக்கு எதிரான, பலுாசிஸ்தான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள பெண் ஒருவர் மோடிக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள, பலுாசிஸ்தான் பகுதி மக்கள் விடுதலைக் கோரி பலுாச் தேசிய இயக்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது,பலுாசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்,பாகிஸ்தான் தேசம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது.அப்பகுதி மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று கூறினார்.மோடியின் உரைக்கு பலுாசிஸ்தான் மக்கள் அதிக வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பலுாச் மாணவர் சங்க தலைவர் கரீமா என்ற பெண், சமூக வலைத்தளம் மூலமாகப் பிரதமர் மோடிக்கு, ரக்ஷாபந்தன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.அதில் அவர், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு ஆளாகி, காணாமல் போன எத்தனையோ சகோதரர்களை பலுாசிஸ்தான் சகோதரிகள் எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இந்திய பிரதமர் மோடியின் வார்த்தைகள் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.மேலும் அவர் எங்கள் சகோதரர்.பாகிஸ்தானின் அடக்கு முறையை, சர்வதேச அரங்கில் எதிரொலிக்க உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க