• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமளி காரணமாக மாநிலங்களவை வரும் 27-ம் தேதி வரை ஒத்திவைப்பு

December 22, 2017 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க கோரி காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை வரும் 27-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. பாராளுமன்ற கூட்டம் துவங்கியதில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் எனவும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டதொடர் துவங்கி ஒரு வாரம் ஆகியுள்ள உள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

அமளியையடுத்து, மாநிலங்களவையை வரும் டிசம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

மேலும் படிக்க