• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்- ராஜ்நாத் சிங்

October 3, 2016 தண்டோரா குழு

இந்திய எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் உடனடியாக தக்க பதிலடி கொடுத்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியாவின் அதிரடி தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார்.

இந்த தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்..

எல்லையில் இந்திய நிலைகள் மீது தொடந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என கூறினார்.

மேலும் படிக்க