• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்- ராஜ்நாத் சிங்

October 3, 2016 தண்டோரா குழு

இந்திய எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் உடனடியாக தக்க பதிலடி கொடுத்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியாவின் அதிரடி தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார்.

இந்த தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்..

எல்லையில் இந்திய நிலைகள் மீது தொடந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என கூறினார்.

மேலும் படிக்க