பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது இந்திய செய்தியாளர்களை அனுமதிக்காமல் தமது பேச்சு இருட்டடிப்பு செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டது உண்மை தான் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் தமது பாகிஸ்தான் பயணம் குறித்து அறிக்கை மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளித்து பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் மரியாதையைக் காக்கும் வகையில் தாம் விருந்தைப் புறக்கணித்ததாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் இந்தியாவின் தொலைக்காட்சி சேனல்களான தூர்தர்ஷன், ஏ.என்.ஐ, பி.டி.ஐ உள்ளிட்டவற்றின் செய்தியாளர்கள் தமது பேச்சைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றார்.
இதன் மூலம் பாகிஸ்தான் தமது பேச்சை இருட்டடிப்பு செய்துவிட்டதாக குறிப்பிட்டார்.பாகிஸ்தான் என்ன செய்ய நினைத்ததோ அதைச் செய்தது. தாம் அதைப்பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்றார். சார்க் உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கூட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தம்மை விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு, பின்னர் உடனே அவர் காரில் ஏறிச் சென்று விட்டதாக ராஜ்நாத் கூறினார்.
அதே சமயம் நாட்டின் பெருமையை பாதுகாக்க வேண்டியது முக்கியம் என்று தாம் உணர்ந்திருந்ததாகத் தெரிவித்த ராஜ்நாத், இந்தியாவின் மானத்தைக் காக்க பாகிஸ்தான் அளித்த மதிய விருந்திற்குச் செல்லாமல் புறக்கணித்ததாகத் தெரிவித்தார்.முன்னதாக ராஜ்நாத் சிங் தனது அறிக்கையில் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பாகிஸ்தானை கண்டித்தனர். பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை நாட்டுக்குத் தெரிவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியதை அடுத்து மக்களவையிலும் ராஜ்நாத் சிங் தமது அறிக்கையை அளித்தார்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்