• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காதது ஏன்? – ஸ்ரீப்ரியா

October 2, 2018 தண்டோரா குழு

ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என நடிகை ஸ்ரீப்ரியா விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.இதுமட்டுமின்றி ஆளும் கட்சி எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையில்,கமலின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் பிக்பாஸ் புகழ் சினேகன்,நடிகை ஸ்ரீபிரியா,நடிகர் நாசரின் மனைவி கமீலா போன்ற பிரபலங்களும் இணைந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார்கள்.இதில்,நடிகை ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

இந்நிலையில் ரஜினி,கமல் என இருவருடனும் அதிக படங்களில் நடித்த ஸ்ரீபிரியா ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.இந்த காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க