October 2, 2018
தண்டோரா குழு
ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என நடிகை ஸ்ரீப்ரியா விளக்கமளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.இதுமட்டுமின்றி ஆளும் கட்சி எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில்,கமலின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் பிக்பாஸ் புகழ் சினேகன்,நடிகை ஸ்ரீபிரியா,நடிகர் நாசரின் மனைவி கமீலா போன்ற பிரபலங்களும் இணைந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார்கள்.இதில்,நடிகை ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.
இந்நிலையில் ரஜினி,கமல் என இருவருடனும் அதிக படங்களில் நடித்த ஸ்ரீபிரியா ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.இந்த காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.