• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

December 30, 2017 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகைபடம் எடுத்து வரும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து நாளை அறிவிக்கவுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள் முதலில் அவர் சொல்லட்டும். இன்று தமிழ் நாடு ஐசியூவில் உள்ளது.

தமிழ்நாட்டை காப்பாற்ற நிறையப்பேர் தேவை.தேவைபட்டால் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் நல்லது என்றார்.மேலும் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க