• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தானில் அரசு மாணவர் விடுதிகளில் தேசிய கீதம் கட்டாயம்

November 29, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி விடுதிகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மாணவர் விடுதி மற்றும் அரசு உதவி பெறும் மாணவர் விடுதிகளில் தேசியகீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை முதன்மை செயலர் சமித் ஷர்மா

“இந்த நடவடிக்கை மாணவர்களிடையே தேசிய வாத உணர்வை உருவாக்கும். காலை 7 மணிக்கு மாணவர்களின் ‘ஜன கன மன’ என்று தொடங்கும் நமது தேசய கீதத்தை பாடுவார்கள்.அந்த சமயத்தில் விடுதி காப்பாளரும் அதில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் 26ம் தேதி, அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு இந்த நாளில் புதிதாக தற்போது பிறபிக்கப்பட்ட உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 800 அரசுபள்ளிகளில் உள்ள விடுதிகளில் சுமார் 40,000 மாணவர்கள் கல்விகற்று வருகிறார்கள். ஜெய்ப்பூர் மாநகர கார்போரசன், நாளின் தொடக்கத்திலும் நாளின் முடிவிலும் தேசிய கீதம் பாடும் பழக்கத்தை தொடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க