• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு

December 2, 2016 தண்டோரா குழு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகிய நடா புயல் மக்களுக்கு அச்சத்தை அளித்தது. ஆனால், அது வலுவிழந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) அதிகாலையில் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது.

இதையடுத்து, மீண்டும் அந்தமானுக்குத் தெற்குப் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், காற்று அதிகமாக வீசும்.

மேலும், கடல் அதிக சீற்றத்தோடு காணப்படும். அதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம்.புதிதாக உருவாக இருக்கும் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க