• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரச விருந்தில் பிரிட்டிஷ் இளவரசருக்கு கொலம்பியா அதிபர் தந்த வித்தியாசமான பரிசு

November 3, 2016 தண்டோரா குழு

கொலம்பியா நாட்டு அதிபர் ஜுவான் மேன்யுல் சான்டோஸ் பிரிட்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு பிரிட்டிஷ் அரசி சார்பில் மிக ஆடம்பரமான அரசியின் வரவேற்பும் விருந்தும் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டன.

அப்போது, பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்புக்கு கொலம்பியா அதிபர் சான்டோஸ் வித்தியாசமான பேனாவைப் பரிசாக அளித்தார்.துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பேனாவைத்தான் அவர் அன்பாக அளித்தார்.இந்த வித்தியாசமான பரிசு, போரைக் கைவிட்டு, சமாதானத்தை மேற்கொள்வதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கொலம்பியா அதிபர் சான்டோஸ் ஏற்கெனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு பரிசாக அளித்திருந்தார். அந்தப் பேனாவில், “தோட்டாக்கள் எங்கள் இறந்தகாலத்தை எழுதின. கல்வி எதிர்காலத்தை எழுதும்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியா அதிபர் சான்டோஸ் கடந்த மாதம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததை உலகமே பாராட்டும் விதத்தில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

கொலம்பிய அதிபர் ஜுவான் மேன்யூல் சான்டோஸ், அவரது மனைவி மரியா க்லெமென்சியா ரோட்ரிகோ ஆகியோருக்கு பிரிட்டிஷ் அரசவை சார்பில் ஆடம்பரமான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

அதில் பங்கேற்ற அரசி எலிசபெத் நீலமணிக் கல்லையும், வைரம் பதித்த தலைப்பாகையையும் அணிந்திருந்தார். இவற்றை அவர் 1960ம் ஆண்டுகளில் வாங்கினார். இது தவிர, எடின்பரோ கோமகனுடன் அவருக்குத் திருமணம் நடந்தபோது அளிக்கப்பட்ட நெக்லஸ், காதுத் தோடு ஆகியவற்றையும் அணிந்து அசத்தினார்.

எலிசபெத் அரசியுடன், இளவரசர்கள் பிலிப், சார்லஸ், கமீலா பார்க்கர் விருந்தில்
பங்கேற்றனர்.கொலம்பியா அதிபரும் அவரது மனைவியும் பக்கிங்ஹாம் மாளிகையில் ஓரிரு தினங்கள் தங்கியிருப்பர்.இளவரசர் சார்லஸும், அவரது மனைவி கமீலாவும் கொலம்பியா நாட்டுக்கு இரு ஆண்டுகளுக்கு முன் பயணம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க