• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கத்தார் அரசு அறிவித்த நற்செய்தி !

September 6, 2018 தண்டோரா குழு

கத்தார் நாட்டில் பணி புரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி தங்கள் நாட்டிற்கு செல்ல விசா தேவையில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.எனினும் கத்தாரில் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த காரணங்களுக்காக தங்களது நாடுகளுக்கு செல்வதற்கு கூட பல்வேறு விசா கட்டுபாடுகள் இருந்தன.இந்நிலையில்,இந்த நடைமுறையில் கத்தார் அரசு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி கத்தாரை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்கள்,இனி அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கத்தாரில் வசிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும்,2022ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டிகள் கத்தரின் தோஹா நகரில் நடக்கவுள்ள நிலையில்,இதனை கருத்தில் கொண்டு தான் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும் படிக்க