• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் மறியலுக்கு தொண்டர்கள் அணிதிரள மக்கள் நலக்கூட்டியக்கம் அறை கூவல்

October 14, 2016 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் அணிதிரள வேண்டும் என மக்கள் நலக்கூட்டியக்கத்தின் கோவை மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மதிமுக மாவட்ட தலைமையகத்தில் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ,

காவிரி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் நான்கு வாரகாலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் இத்தகைய ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்தது.

இந்த ரயில் மறியல் போராட்டத்தை வெற்றிகராமக்கிட செப் 17 ஆம்தேதி கோவை ரயில் நிலையத்திலும், செப்.18 ம் தேதி பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என கோவை மாவட்ட மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பாக முடிவு செய்யப்பட்டது.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சிகள், மக்கள் நல இயக்கங்களின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் நீராதார உரிமையை பாதுகாக்க அணிதிரள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க