• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய ரூபாய் நோட்டில் நேதாஜி உள்ளிட்டோரின் படங்களையும் அச்சிட வேண்டும் – அர்ஜுன் சம்பத்

November 9, 2016 தண்டோரா குழு

வெளியிடப்பட உள்ள புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி மட்டுமல்லாமல் நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட முக்கிய தேசத் தலைவர்களின் படங்களையும் அச்சிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதை இந்து மக்கள் கட்சியினர் வரவேற்று கோவையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்தியா முழுவதும் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார், இதற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரவேற்றனர்.

மேலும், இது குறித்துப் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், “பிரதமர் மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் நாட்டின் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணம் வெளியே வரும், பணப்பதுக்கல் குறையும். இரண்டு நாள் பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டால், பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

வெளியிடப்பட உள்ள புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி மட்டுமல்லாமல் நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட முக்கிய தேசத் தலைவர்களின் படங்களையும் அச்சிட வேண்டும் எனவும் பணத்தின் வடிவமாக இருக்ககூடிய லட்சுமி, கணபதியின் படங்கள் இடம் பெறவேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க