• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு கொண்டாட்டம், அத்துமீறினால் கடும் நடவடிக்கை

December 26, 2016 தண்டோரா குழு

“வரும் புத்தாண்டு தினக் கொண்டாடத்தின் போது அத்துமீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறும்போது, “விபத்தில்லா 2017ம் வருடத்தின் தொடக்கமாக புத்தாண்டு தினத்தன்று கோவை மாநகரில் 22 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும். மேலும், பாதுகாப்புப் பணியில் 1500 போலீஸார் ஈடுபட உள்ளனர்.

இதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர் மீதும், பொதுமக்களுக்கும் பிற வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க