• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – அமீர் கான்

December 17, 2016 தண்டோரா குழு

மத்திய அரசு எடுத்துள்ள ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நல்ல முயற்சி, நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என பாலிவூட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நவம்பர் 8 ம் தேதி பழைய ரூபாய் 500,1000 தடை செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார் . இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், வரவேற்பும் வந்துக்கொண்டிருக்கிறது.
மோடியின் இந்த முயற்சிக்கு நடிகர் அமீர் கான் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகர் அமீர் கான் பேசியதாவது;

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைகளால் நான் எந்தப் பிரச்சனைகளையும் சந்திக்கவில்லை. நான் முறையாக வரி கட்டுபவன். ஏதாவது வாங்கவேண்டும் என்றால் டெபிட் கார்டையோ அல்லது கிரெடிட் கார்டையோதான் பயன்படுத்துகிறேன். அதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

யாரிடமெல்லாம் கறுப்புப் பணம் உள்ளதோ, அவர்களே பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி நல்ல நடவடிக்கையை எடுத்துள்ளார். அவரின் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நான் பொருளாதார நிபுணர் அல்ல. யாராவது ஒரு நல்ல தொடக்கத்தை முன்னெடுத்தால், அவர்களுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். அதே நேரம் சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க