• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

220 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்

December 26, 2016 தண்டோரா குழு

நல்லெண்ண அடிப்படையில் 220 இந்திய மீனவர்களைச் சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.

பாகிஸ்தான் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் என்று கூறி, இந்திய மீனவர்கள் 220 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்து மாலிர் சிறைசாலையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் கிறிஸ்துமஸ் தினமான ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) விடுதலை செய்துள்ளது..

அரேபிய கடல் எல்லை சரியாக நிர்ணயிக்க முடியாததால் இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இரு நாடுகளுக்கும் சுகமான உறவு இல்லாததால் மீனவர்கள் தங்கள் தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் இருக்க வேண்டியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஸ் எ முஹம்மத் தீவிரவாத இயக்கம் இந்தியாவின் எல்லை பகுதியான உரியில் தாக்குதல் நடத்தியது என்று புதுதில்லி அதிகாரிகள் நம்புகின்றனர். இது இந்திய பாகிஸ்தான் உறவில் அதிக விரிசல் ஏற்பட காரணமானது.

இது குறித்து கராச்சி மாலர் சிறைச்சாலை அதிகாரி ஹசான் சேதோ செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “நல்லெண்ண அடிப்படியில் 22௦ மீனவர்களை விடுதலை செய்துள்ளோம். இது தவிர, இன்னும் 219 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும் படிக்க