• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானில் ஆயிரம் தெரு நாய்கள் கொலை

October 19, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தான் காரச்சி மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான காராச்சியில் 15,000 மேற்பட்ட பொதுமக்கள் தெரு நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள்.

நாய்களால் ஏற்படும் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. அதில் பொதுமக்களுக்குத் தொல்லை தரும் இரண்டாயிரம் நாய்களை விஷ ஊசி மூலம் கொல்ல வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களால் தெருவில் சுற்றிச் திரிந்து கொண்டிருந்த 1050 தெரு நாய்கள் கடந்த புதன்கிழமை விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டன. இதற்கு விலங்கின ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகார வரம்பு தலைமை ரேஹன் ஹஷ்மி கூறியதாவது,

கனத்த இதயத்துடன் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாய்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. அதைக் கட்டுப்படுத்த என்ன வழி என்று விலங்கின ஆய்வாளர்கள் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதைக் கட்டுப்படுத்த விரைவில் வழி வகுப்போம்.

மேலும் தற்போது நாய்கள் கொல்லப்பட்டது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள், குறிப்பாக விலங்குகளை நேசிப்போரும் ஆர்வலர்களும் தெருவில் சுற்றி திரியும் நாய்களைத் தத்து எடுத்துக் கொள்ள முன்வரவில்லை. அதற்குக் காரணம் அவரவர் வீட்டில் ஏற்கனவே நாய்கள் இருப்பது தான் என்றார் அவர்.

மேலும் படிக்க