• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்

November 15, 2017 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இன்று(நவ 15) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற 1200 படுக்கை வசதிகள் உள்ளன.தற்போது பனியில் 300 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.நோயாளிகளை கவனிக்க போதிய எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லாததால் பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

இதனையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள், டீன் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் டீன் அசோகன் பேச்சு வார்த்தை நடத்தினார்.கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பதாக அவர் உறுதி கூறியதை தொடர்ந்து செவிலியர்கள் கலைந்து பணிக்கு சென்றனர்.இந்த போராட்டத்தால் மருத்துவப் பணிகள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க