• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாற வாய்ப்பு

December 7, 2016 தண்டோரா குழு

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது. எனினும், இந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பொழியும்”.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டி உள்ள பகுதியில் புதிதாக மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் , சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க