• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீலகிரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

August 15, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் பைக்காரா உள்ளிட்ட 6 அணைகளும் திறக்கப்பட்டுள்ளன.

அவலாஞ்சி,அப்பர் பவானி அணைகள் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையில், நேற்று இரவு முதலே நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(ஆக.16) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க