• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் – மோடி

October 1, 2016 தண்டோரா குழு

தூய்மை இந்தியா திட்டம் அக்டோபர் 2 ம் தேதி 2014ம் ஆண்டு துவக்கப்பட்டது.இத்திட்டம் துவங்கப்பட்ட நாளான இன்று,அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தூய்மை பணியில் ஈடுபடும் உங்களின் புகைப்படங்களை நரேந்திர மோடி ஆப்ஸ் மூலம் பகிருங்கள். உங்களின் இந்த முயற்சி பலருக்கும் முன்னோடியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

தூய்மை இந்திய திட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் விளம்பர தூதுவர்காளாக நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க