• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெரினாவில் ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டம்

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை:திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திமுக உறுப்பினர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசின் மீது நம்பிக்கை கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், தனது சட்டை கிழிக்கப்பட்டதை கண்டித்தும் எதிர்க்கட்சி தலைவர்

மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து புகார் அளித்தார்.

முன்னர் ஆளுநரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. உடனே அவர்கள் தர்ணா நடத்தியதை அடுத்து ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரைச் சந்தித்த ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு, மெரினா கடற்கரை அருகே காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில், திமுக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க