• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீடு தான் சரியான வழி: ரஜினி பட நடிகை!

October 23, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் மீடு என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மீடு மூலம் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.இதனால் அவர் இணையமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார்.

தமிழகத்தில் மீடு ஹாஸ்டேக் மூலம் பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.அவரை தொடர்ந்து பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சமுக வலைதளங்களில் மீடு மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரும்,கபாலி பட நடிகையுமான நடிகை ராதிகாஆப்தே மீடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளர்.அதில், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட,பல நடிகைகள் மீடு மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.இனிமேல்,இது போன்ற பாலியல் தொல்லைகள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நடக்கக் கூடாது.அதற்கு இந்த மீடு தான் சரியான வழி என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க