• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் போட்டியிடும். : கமல்ஹாசன்

August 3, 2018 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“ஊழலற்ற வார்த்தையை தைரியமாக உபயோகிக்க இருக்கிறோம்.அதனால் நிறைய பேர் கூட்டணிக்கு கிடைக்க மாட்டார்கள்.ஊழலற்ற கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளனர்.உள்நோக்கத்துடன் தான் சிலைக்கடத்தல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.ஊழல் இல்லாத துறை எது?ஊழல் குறித்து பலர் பட்டியலிட்டுள்ளனர்,இனி எந்தத் துறையில் ஊழல் இல்லை என்பதையே பட்டியலிட வேண்டும்.தமிழக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை.லோக் ஆயுக்தாவை நீர்த்துப்போக செய்ததன் மூலம் வெளிப்படை தன்மையில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள்.நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் எனக் கூறினார்.மேலும், திட்டமிட்டபடி விஸ்வரூபம் – 2 திரைப்படம் வெளியாகும்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க