• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்தியப்பிரதேச மாநில ஆளுநராக ஆனந்தி பென் படேல் நியமனம்

January 20, 2018 தண்டோரா குழு

குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் மத்தியபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஆனந்தி பென் படேல்.கடந்த 2014ம் ஆண்டு மோடி இந்திய பிரதமரானதைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை ஆனந்தி பென் படேல் பெற்றார்.

இந்நிலையில் குஜராத் ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் கோலி 2016ம் ஆண்டு முதல் மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார்.தற்போது மத்திய பிரதேச ஆளுநர் பதவி காலியாக உள்ளதால் அந்த பதவிக்கு ஆனந்தி பென் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க