கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய பகவான் மகாவிஷ்ணு,கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்ற கிருஷ்ணர் பிறந்த இத்திருநாளில்,மக்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய்,தயிர், பழங்கள்,இனிப்புகள்,பலகாரங்களை படைத்து,குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை வீட்டின் வழிநெடுக பதித்து,பகவான் கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வந்தருளியதாக பாவித்து,கிருஷ்ண பகவானை போற்றி வணங்கி,ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில்,பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும்,பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, கடமை உணர்வுடனும்,மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி,அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு