• Download mobile app
17 Jul 2025, ThursdayEdition - 3445
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு போராட்டம் !

November 17, 2018 தண்டோரா குழு

கேரளா முழுவதும் இன்று (நவ.,17) திடீர் முழு அடைப்பு போராட்டத்திற்கு சபரிமலை கர்மா சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.இதற்கிடையில்,ஐக்கிய வேதி அமைப்பின் மாநில தலைவி சசிகலா(56) நேற்று (நவ.,16) இரவு சபரிமலைக்கு அய்யப்பனை தரிசனம் செய்ய சென்றார்.

ஆனால்,இரவில் செல்ல வேண்டாம் என போலீசார் அவரை மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.இதனால் சசிகலா அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து,சசிகலாவை கைது செய்த போலீசார்,அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்நிலையில்,சசிகலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இந்து ஐக்கிய வேதி,பா.ஜ.,மற்றும் இந்து அமைப்புக்கள் சார்பில் இன்று திடீர் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கன்னியாகுமரியிலிருந்து செல்லும் பேருந்து களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க