October 2, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல மலையாள இசையமைப்பாளரும் வயலினிஸ்டுமான பாஸ்கர் தனது மனைவி மற்றும் தனது 2 வயது மகள் தேஜஸ்வினி பாலாவுடன்,கடந்த மாதம் 28ஆம் தேதி காரில் திருச்சூர் சென்று விட்டு திரும்பினார்.
பள்ளிப்புரம் அருகே வந்த போது,திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.இந்த விபத்தில்,2வயது மகள் தேஜஸ்வினி பாலா,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கர்,அவரது மனைவி மற்றும் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில்,பாலபாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.