• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு அலுவலகங்களில் ஓணம் கொண்டாட தடை கேரள அரசு அதிரடி உத்தரவு

September 2, 2016 தண்டோரா குழு

தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு அம்மாநில அரசு தடை பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலத்தின் அறுவடை திருநாளான ‘திருவோணம்’ பண்டிகைக்கான இந்த ஆண்டு கொண்டாட்டம் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கேரள மக்கள் உற்சாகமாகச் செய்து வருகின்றனர். ஓணம் பண்டிகையின் போது, பல வண்ண மலர்களில், அத்தப்பூ என்னும் ‘பூக்கோலம்’ போட்டுப் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும், பத்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் போது அரசு அலுவலகங்கள்,வீடுகள்,கோயில்கள்,என்று அனைத்து இடங்களிலும் பூ கோலங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில்,கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதைக்குறித்து கேரள தலைமைச் செயலர் எஸ்.எம்.விஜய் ஆனந்த் பேசுகையில்,அரசு அலுவலக பணி நேரங்களில் ஓணம் உள்ளிட்ட எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடக் கூடாது.அலுவலக பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது.அனைத்துத் துறைகளின் தலைவர்களும் அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க